Wednesday 6 April 2011

தேர்தல் மேடை -2

எல்லா கட்சிகளும் சொந்தமாக தொலைக்காட்சி வைத்துக் கொண்டு அவரவர் சொந்த கொள்கைகளை பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள் .சும்மா சொல்லக் கூடாது தலைவர்களோ அவர்களின் ஆஸ்தான எழுத்தாளர்களோ ,தெரியவில்லை சிறப்பாகவே சிந்திக்கிறார்கள் .கேட்டதில் பிடித்தவை சில .


"தலைவர்கள் தொண்டர்களை ஏமாற்றுவார்கள் ஆனால் மனைவிமார்களை ஏமாற்றும் பழக்கத்தை முதல்முதலாக தங்கபாலு தொடங்கி வைத்திருக்கிறார்." --- வேற யாரு ! ஈ .வி .கே .எஸ்.இளங்கோவன் தான் .


"வெள்ளையனே வெளியேறு போல இது கொள்ளையனே வெளியேறு போராட்டம் "--புரட்சியாக ஜெயலலிதா .


"கரும்பு தோட்டத்திற்கு யானையை காவல் வைக்கலாமா ?கொய்யா தோட்டத்துக்கு குரங்கை காவல் வைக்கலாமா ?அதனால தான் சொல்றேன் ,மக்களே ,கலைஞர முதல்வராக்காதீங்க "---விஜயகாந்த் .


"கொலை செய்வதும் கலையப்பா ,கொள்ளை அடிப்பதும் கலையப்பா ,மந்திரிகுமாரியில இவர் எழுதுன வசனம் தான்"--விஜயகாந்த் .


"எனக்கு எதிரி என்று சொல்ல மாட்டேன் ,எதிர்ப்பாளர் என்றும் சொல்ல மாட்டேன் ,என்னைப் பிடிக்காதவர் ,அவ்வளவு தான் "---ஜெ பற்றி உருக்கமாக கலைஞர் .


"என் மடியில் தவழ்ந்த குழந்தை இளங்கோவன் "---சென்டிமென்ட்டாக கலைஞர் .


"இலவசம் தேவை தான் .ஆனால் எவை இலவசமாக தேவை தெரியுமா ?இலவச கல்வி தேவை ,இலவச தண்ணீர் தேவை ,நல்ல ரோடுகள் தேவை .."---- ஜெயிக்க போவதில்லை என்ற தன்னம்பிக்கையில் யாதவ சபை தலைவர் தேவநாதன் யாதவ் .


கலைஞர் டிவியில் இப்போதெல்லாம் ஸ்டாலினை விட கனிமொழியைவிட ஏன் கலைஞரை விடவும் கூட வடிவேலுவை தான் அதிகம் காண்பிக்கிறார்கள் .இந்த தேர்தலே விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் நடக்கும் சொந்த தகராறைப் போல காட்டுகிறார்கள் .


பிரேமலதா விஜயகாந்த் சுலபமாக புரியும் படி சுற்றி சுற்றி பேசுகிறார் .ஆனால் இந்த வெயிலில் எப்படித்தான் அத்தனை நீள கை வைத்த சட்டை போட்டிருக்கிறாரோ தெரியவில்லை .பார்க்கும் போதே வேர்க்கிறது .


அம்மாவின் வண்டிதான் இந்த தேர்தலின் ஹைலைட் .ஆனால் அவர் வைத்துக் கொண்டு படிக்கும் பெரிய எழுத்து நல்லதங்காள் கதை வகை குறிப்புகள் சரி தமாஷ் .அப்புறம் பக்கத்து மேட்டில் வேட்பாளர்கள் வரிசையாக நிற்பதும் ஜெ பேர் சொல்லும் போது உள்ளேன் அம்மா சொல்வதும் ....:))) .



3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வாக்கு

சி.பி.செந்தில்குமார் said...

>>
கலைஞர் டிவியில் இப்போதெல்லாம் ஸ்டாலினை விட கனிமொழியைவிட ஏன் கலைஞரை விடவும் கூட வடிவேலுவை தான் அதிகம் காண்பிக்கிறார்கள் .இந்த தேர்தலே விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் நடக்கும் சொந்த தகராறைப் போல காட்டுகிறார்கள் .

ஹா ஹா உண்மைதான்.. எலக்‌ஷன் முடியும் வரை டி வி யே பார்க்காம இருந்தாத்தான் நாம ட்தப்பிச்சோம்

பூங்குழலி said...

நீங்க சொல்றது உண்மைதான் செந்தில்குமார் .எந்த சேனலை பார்த்தாலும் இவங்க தொல்லை தான்