Tuesday 31 July 2012

என் வெளி








ஒரு அண்டமெங்கும் விரிந்திருக்கிறது
என் வெளி
நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம்
என ஐந்தும் சேர்த்து


சில காடுகள் மலைகள் சோலைகள் நீரோடைகள்
எனவும் பரவிக் கிடக்கிறது
என் வெளி
எங்கோ ஒரு பாலைவன மணல் பொட்டலும் சேர்த்து


தெளிந்த நீரோடைகளில்
நீந்திக் கிடக்கிறேன் நான்
காடுகள் தோறும் சுற்றித் திரிகிறேன்
சோலைகளில் மலர் கொய்து
சூட்டிக் களிக்கிறேன்
என் மனம் போல்


சிகரங்களில் ஏறி தொட்டுப் பார்க்கிறேன்
விண்ணைக்  கூட
நட்சத்திரங்களை பறித்து
ஓடைகளில் நனைக்கிறேன்
நீரெல்லாம் ஜொலிக்கின்றன
என் மீன்கள்



குயில்கள் கூவிக் கடக்கின்றன என்னை
மான்கள் கொஞ்சிப் போகின்றன
சில எருமைகளும் பாம்புகளும்
உரசிப் போகின்றன
அதனதன் விருப்பம் போல்



கீறும் சிறு முட்களும்
நாறும் சில குப்பைகளும்
குறுக்க  முடியாததாக இருக்கிறது என் வெளி
மலர்கள் சொரிந்து கிடக்கின்றன
என் பாதையெங்கும்
மகரந்த வாசம் ஏந்தி



எவரும்  தீண்ட  முடியாததாக
இருக்கிறது என் வெளி
எனதே எனதாக -
எவர்க்கும்  வசப்படாமல்
உலவித்  திரிகிறேன்-
நானோர்
வனதேவதையென












10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள்...
முடிவில் சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி...


பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

பூங்குழலி said...

நன்றி நண்பரே

Seeni said...

ada daa arumai!

Avargal Unmaigal said...

வனதேவதை சொன்ன கவிதை அருமை

பால கணேஷ் said...

மிக அழகான வார்த்தைக் கோவைகளால் மயக்குகிறது உங்கள் தமிழ். வனதேவதைக்கு என் நல்வாழ்த்துக்கள். அருமை.

பூங்குழலி said...

நன்றி சீனி

பூங்குழலி said...

மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்

பூங்குழலி said...

மிக்க நன்றி கணேஷ் ...மனம் உவந்து போனேன் உங்கள் பாராட்டை கேட்டு

SELECTED ME said...

அழகு

பூங்குழலி said...

மிக்க நன்றி நிலவன்பன்