Wednesday 26 September 2012

மழை

                                                            



தூர தேசமொன்றில்
தொலைந்து போயிருந்தேன் நான்
பெயர் அறியாத தெருக்களில்
உலவித் திரிந்தேன்


யார் இவள்  என
கிசுகிசுத்து  போனது காற்று
முகம் காண
வந்து போனதொரு மின்னல்


ஆதரவாய் கூந்தல் வருடிப்
போனதொரு மலர்
எவளோ  என கடந்து
போயினர் பலரும் 


யாரும்  இல்லாமல்
முகவரியற்று
நான் போன
அந்நாளில்


தேடி வந்து 
என் தோள் பற்றி
நானிருக்கிறேன் என
கரம் சேர்த்து 
என்னுடன் நடந்தது
மழை ......





26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்...

அந்த மழை எங்கள் ஊருக்கும் வரட்டும்...

Seeni said...

arumai!

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மழையெனப் பெய்த அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

MARI The Great said...

அருமையான வார்த்தை பிரயோகம்! நல்ல கவிதை!

Avargal Unmaigal said...

நல்ல கவிதை! இயற்கைதான் எப்போதும் நம்முடன் துணைவரும்

Yaathoramani.blogspot.com said...

அருமையான கவிதை
இயற்கையுடன் இப்படி இரண்டறக் கலக்கக் கற்றுக் கொண்டால்
தனிமைத் துயர் ஏது
சங்கடங்க்கள் ஏது
கவிதைக்கு பஞ்சம்தான் ஏது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சசிகலா said...

அற்புதமான வரிகள் மனந்தொட்ட பகிர்வு.

பூங்குழலி said...

கண்டிப்பாக தனபாலன் ,இதே மழை உங்கள் ஊருக்கும் வரட்டும்

பூங்குழலி said...

நன்றி சீனி

பூங்குழலி said...

மிக்க நன்றி குணசீலன்

பூங்குழலி said...

மழையென மனம் குளிர வைத்தது உங்கள் பாராட்டு ,நன்றி வைகோ அய்யா

பூங்குழலி said...

வருகைக்கு நன்றி வரலாற்று சுவடுகளின் அதிபரே

பூங்குழலி said...

எங்கும் இயற்கை நம்மை அரவணைக்கும் ,நன்றி அவர்கள் உண்மைகள்

பூங்குழலி said...

இயற்கையை உணர்ந்துவிட்டால் கவிதைக்கு பஞ்சமில்லை என்பது உண்மைதான் ..மழை செழிப்புடன் கவிதையையும் அள்ளித் தருகிறது .மிக்க நன்றி ரமணி

பூங்குழலி said...

மிக்க நன்றி சசிகலா வருகைக்கும் பாராட்டுக்கும்

அருணா செல்வம் said...

பூவும் குழலும் உங்களுடனேயே இருக்கும் பொழுது மழையும் வேண்டுமா துணைக்கு?
அருமையான கவிதை.

பூங்குழலி said...

ஹா ஹா ...ஆமாம் பூவும் குழலும் என்னுடனே இருப்பதை மறந்தே போனேன் ...மழை வரும் நாளில் அதன் துணைப்போல சுகமானது வேறொன்றுமில்லையே !மிக்க நன்றி அருணா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்

பால கணேஷ் said...

எக்ஸலண்ட். உடல் குளிர்ந்தது வெளியில் பெய்த மழையில்... மனது நனைந்தது உங்களின் கவிதையால் ரசனை மழையில்!

பூங்குழலி said...

இன்னமும் மழைப் பக்கம் நீங்கள் ஒதுங்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ..மிக்க நன்றி கணேஷ் உங்கள் பாராட்டுக்கு

கீதமஞ்சரி said...

பழகிய ஒருவரை பழகாத இடத்தில் பார்த்தால் பரவசம்தானே... உங்களைப் பார்த்ததும் மழைக்கும் அந்த உணர்வு தொற்றிக்கொண்டது போலும். மனம் வருடும் கவி வரிகள். பாராட்டுகள் பூங்குழலி.

பூங்குழலி said...

ஆம் எங்கே இருந்தாலும் இயற்கை நம் முகம் அறிந்தது தானே ..நன்றி கீதமஞ்சரி

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

பூங்குழலி said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

vimalanperali said...

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.தேடி வந்து கரம் கோர்த்த மழை நன்று,நல்ல படம்,நல்ல வெளிப்பாடு/

பூங்குழலி said...

மிக்க நன்றி விமலன் ..மழை போல வந்து வாழ்த்தியதற்கு