Tuesday 29 January 2013

என் கல்லறையில்

என் கல்லறையில் நின்று அழ வேண்டாம் 
நான் அங்கு இல்லை .நான் உறங்கவில்லை .
வீசும் ஆயிரம் காற்றுகள் நான்
பனிமேல் வைரச் சுடர்கள் நான்  

முதிர்ந்த கதிர்மேல் கதிரொளி நான் 
இலையுதிர் காலத்தின்  மெல்லிய மழைத்துளி  நான்
விடியலின் நிசப்தத்தில் நீ விழிக்கும் போது

சத்தமின்றி வட்டமிடும் பறவைகள்  சிறகுகள் 
துரிதப்படுத்தும்  வேகத்தின் விசையும் நான் 
இரவில் ஒளிரும் மென்மை  நட்சத்திரங்கள் நான் 
என்  கல்லறையில் நின்று   அழ  வேண்டாம்
நான் அங்கு இல்லை .நான் இறக்கவில்லை .



 
Do not stand at my grave and weep 
 By Mary Elizabeth Frye 

 
Do not stand at my grave and weep
I am not there. I do not sleep.
I am a thousand winds that blow.
I am the diamond glints on snow.
I am the sunlight on ripened grain.
I am the gentle autumn rain.
When you awaken in the morning's hush
I am the swift uplifting rush
Of quiet birds in circled flight.
I am the soft stars that shine at night.
Do not stand at my grave and cry;
I am not there. I did not die.




8 comments:

T.N.Elangovan said...

உலுக்குகிறது இந்த மொழிபெயர்ப்பு. தொடருங்கள்...இதே போல்..

பூங்குழலி said...

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இளங்கோவன்

பால கணேஷ் said...

உவமைகள் வியக்க வைககின்றன. வார்த்தைகள் மயிலிறகாய் வருடுகின்றன. உங்களின் இந்தப் பணி வெகு அருமை. ‌அவ்வப்போது மொழிபெயர்ப்பாகவும் எழுதுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான மொழிபெயர்ப்பு...

பூங்குழலி said...

மிக்க நன்றி கணேஷ்

பூங்குழலி said...

நன்றி தனபாலன்

அருணா செல்வம் said...

அழகான ஆழ்ந்த கருத்துள்ள கவிதையை
மொழிப்பெயர்த்து இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

பூங்குழலி said...

நன்றி அருணா