Sunday 23 March 2014

பொய்கள்

பொய்யர்களின் கூடாரமாக இருக்கின்றது
உலகம்
தத்தம் பொய்களை பொதிகளாக சுமந்தபடியே
வலம்  வருகின்றனர் பலரும்
இப்பொதிகளுள்ளே சிறைப்பட்டிருக்கின்றன
சிலபல மெய்களும்
அன்னப்பறவைகளாக  இருந்தாலன்றி
இவற்றை இனம் பிரிப்பது சாத்தியம் இல்லை தான்


மெய்கள் தோய்த்தே  ஆக்கப்படுகின்றன
பல பொய்கள்
மெய்  தோய்ப்பில்லாத பொய்கள்
சில நாள் ஓட்டத்தில் செத்து போகின்றன
மெய் தோய்த்த பல பொய்களில்
சில நாளில் மெய் மரித்து போகிறது
உயிர்த்திருக்கிறது பொய்யே  மெய்யென

பொய் கலவாமல்  இருக்கின்றன
சில மெய்கள்  -பிடிவாதமாய்
அவற்றை வன்புணர முயற்சித்தபடியே இருக்கின்றன
ஆணவக்கார பொய்கள்
தப்பியசில மெய்கள்
ஒளிந்தே கிடக்கின்றன
அப்பொய்கள் மரிக்கும் வரை
மெய்களாகவே







2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய உண்மைகள்...

பூங்குழலி said...

ஆமாம் தனபாலன் நன்றி