Thursday 27 March 2014

பாடல்

அடிப்பட்ட  குழந்தை போல் 
அழுதது என் இதயம் 
நிறுத்தமில்லாமல்  இரவு முழுதும் 
என் அழுகைகள் சேர்த்து நான் 
ஒரு பாடலாய் கோர்க்க வேண்டியிருந்தது 

ஒரு அழுகை கருத்த நள்ளிரவிலும் 
ஒன்று முதல் சேவல் கூவிய போதும்---
அடிபட்ட குழந்தை போல்
இருந்தது என் இதயம் 
ஆனால் எவரும் அறியவில்லை 

வாழ்க்கையே , என்னை உன் கடனாளி ஆக்கினாய் 
நெடுநாள் உனக்கு பணி செய்யவேண்டும் நான் 
ஓ ஆனால் ,இந்த கடன் கொடுமையானது 
இது பாடலால் தீர்க்கப்பட வேண்டும்

 

Song Making
 Sara Teasdale
My heart cried like a beaten child
Ceaselessly all night long;
I had to take my own cries
And thread them into a song.

One was a cry at black midnight
And one when the first cock crew --
My heart was like a beaten child,
But no one ever knew.

Life, you have put me in your debt
And I must serve you long --
But oh, the debt is terrible
That must be paid in song.



4 comments:

தனிமரம் said...

ஆஹா பாடல் மூலம் கடன் தீர்க்க நினைக்கும் ஆவல் அருமை சகோதரி.

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழாக்கமும் அருமை... வாழ்த்துக்கள்...

பூங்குழலி said...

நன்றி தனிமரம்

பூங்குழலி said...

மிக்க நன்றி தனபாலன்