Sunday 1 July 2018

The Pied Piper of Hamelin

தலைப்பை பாத்து இது ஹாமெலின் எலிகளை  பைப் வாசித்து ஆத்துல  கொன்ன பைப்பர் கதைன்னு நினைச்சிருந்தீங்கனா ?சாரி ...

எங்கப்பாக்கு நிறைய ஹாபிஸ் உண்டு .நிறைய படிப்பாங்க .கதை எழுதுவாங்க .கட்டுரை எழுதுவாங்க .கவிதை எழுதுவாங்க .எங்க வீட்டு தோட்டத்தை ரொம்ப நல்லா பாத்துக்குவாங்க .அப்புறம் சின்ன வயசுல எனக்கு ஓலைய கீறி தென்னந்துடப்பம் செய்ய சொல்லி கொடுத்திருக்காங்க .அப்புறம் ஓலை பின்ன.இன்னமும் நிறைய நிறைய .இதெல்லாம் அப்பாவ நல்லா தெரிஞ்ச எல்லாருக்குமே தெரியும் .

ஆனா நிறைய பேருக்கு தெரியாத அப்பாவோட ஹாபி ஒண்ணு இருக்கு .அதுதான் எலி பிடிக்கிறது .

இவ்வளவு தானானு இத அசால்ட்டா கடக்க போறீங்களா ?நிற்க .வீட்டில எலி பிடிக்கிறது அவ்வளவு லேசான வேல இல்ல .அதுவும் தோட்டத்துல குடியும் குடித்தனமுமா  இருக்குற எலி ஃபேமிலிய ஒழிக்கிறது கருப்பு பணத்தை ஒழிக்கிறதை விட கஷ்டம். எலி தானே ,மருந்து வச்சா செத்துறாதானு நினைக்கிறீங்களா ?டிமானிடைசேஷன்ல கருப்பு பணம் ஒழிஞ்சுதாங்கிறது எப்படி ரிசர்வ் வங்கிக்கே தெரியாதோ அதே மாதிரி மருந்த சாப்பிட்ட எலி செத்துச்சான்னு நமக்கே தெரியாது .அப்படியே  செத்தாலும் ரெண்டு நாள் கழிச்சி அந்த நாத்தம் குமட்டற வரைக்கும் நாம வெயிட் பண்ணனும் .

எலிகள ஒழிக்கறதுக்கு சிறந்த வழி அத பிடிச்சு நாமே கொல்றது தான் .பிடிக்க வேற இப்ப நிறைய  டைப்  பொறீஸ் இருக்கு .பேப்பர்ல ஓட்ட வைக்கிற பொறி  ஒண்ணு இருக்கு பாருங்க .மறந்தாப்பல அதுல கால வச்சி பாருங்க .அது பக்கமே மறுபடி போக மாட்டீங்க .அதனால எலி பிடிக்க ஆக சிறந்த வழி பழைய மாடல் மரப்பொறி தான் .

இத மெயின்டெய்ன் பண்றதே  ஒரு பெரிய வேல .அப்பா இதுல இருக்குற ஸ்பிரிங்குக்கு சரியா எண்ணெய் போட்டு அப்பப்ப கழுவி அத பக்காவா மெயின்டெய்ன் பண்றதுல எக்ஸ்பெர்ட் .எலிவேட்டை டைம் ராத்திரி 9.15 ஏனா அப்பா கரெக்ட்டா 9 மணிக்கு சாப்பிட்டிருவாங்க .அப்புறம் அந்த பொறிக்கு தேங்காய் வைக்கணும் .சீஸ் அயல் நாட்டு ஜெரிகளுக்கு மட்டும்தான் .சரியான சைஸ்ல தேங்கா  பீஸ் வேணும். ரொம்ப பெருசா இருந்த எலி சாப்பிட்டுட்டு நைசா ஓடிரும் .சிறுசா இருந்தா கொக்கில மாட்ட முடியாது .அப்புறம் கூட தேங்காய சும்மா வைக்க முடியாது .லேசா சுட்டு தான் வைக்கணும் .அப்ப தான் அந்த வாடைக்கு எலி வருமாம் .

இப்படி எல்லாம் செட் பண்ணி பொறிய வழக்கமா எலி வர எடத்துல
வச்சிறணும் .எல்லாம் சரியா செஞ்சிருந்தா எலி மாட்டிரும் .எலி மாட்டினவுடனே பொறி மூடுற சத்தத்துல அப்பா நிறைய நாள் பாதி தூக்கத்துல எந்திரிச்சிருக்காங்க .


காலைல முழிச்சவுடனே முதல் வேல பொறிய கொண்டு போய் தோட்டத்துல வச்சிருவேன் .அப்பா பல்ல வெளக்கிட்டு பிரெஷா ,வந்து ஒரு செக் பண்ணி பார்த்துட்டு (மாட்டிருக்கிறது எலி தானான்னு confirm பண்ணணும்ல ) , அத ஒரு பக்கெட் தண்ணில முக்கிருவாங்க.அப்புறம் அது மேல கல்ல வச்சிருவாங்க .எலி தப்பிச்சிருச்சுனா ..labour lost ஆச்சே .அப்புறம் எலி செத்தவுடனே கவர்ல போட்டு குப்பைல போட்டுருவாங்க .சில சமயம் செத்திருச்சா சந்தேகமா இருந்தா டப்னு தலையில கல்ல வச்சு ஒரு .....(இத ஒரு தடவ என் மகன் பாத்துட்டு பயந்து போயிட்டான் ).


ஒரு தடவையெல்லாம் உள்ள ஒரு எலி ,வாலு மாட்டிகிட்டு வெளிய ஒரு எலின்னு  ஒரே பொறில ரெண்டு எலியெல்லாம் மாட்டி இருக்கு  .ரெண்டு மூணு நாளைக்கு எலி மாட்டாம குடும்பமே க்ளோஸ் ஆகிருச்சுன்னு தெரியற வரைக்கும் அப்பா பொறி வச்சிக்கிட்டே இருப்பாங்க .

படங்கள்ல இருக்கிறது நேத்து மாட்டின எலி .பாவம் இப்ப உயிரோட இல்ல.RIP .