கூண்டுக்குள் ஒரு பறவை
தானியம் பிரிப்பதும் உண்பதும் தவிர்த்து
வேறு பணியின்றி
அழகு செய்வதும் பேணுவதும் கடமையென்று
அண்டை கூண்டுகளில் இருக்கும் பறவைகள் போலவே ...
வெளியே இருப்பவை பூனைகள் மட்டுமே
என்ற அச்சுறுத்தலில்
கூண்டுக்குள் இருப்பதே சுகமென்று
பழகிக் கொண்டு
சுற்றியிருக்கும் கம்பிகளும்
தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டும்
பாதுகாப்பிற்கே என்றும் மகிழ்ந்து போய்
வெளியேற திமிரும் இன்னொரு பறவையை
ஆணவம் பிடித்ததாய் அவமானம் செய்து
அது வெளியே போனபின் விரித்த சிறகை
அண்ணாந்து ஆர்வமாய் வாய்பிளந்து பார்த்து
வானத்தை எட்டினால் மட்டுமே சிறகுகள் வருமென
கூண்டுக்குள் மீண்டும் சமாதானமாகி
எவருமற்ற ஒரு பொழுதில்
பறப்பதாய் பாவிக்கையில்
கைகளுக்கடியில் சிறகுகள் இருப்பதை அறிந்ததும் ,
எதற்கென்று புரியாதிருந்து ,பின்
பூட்டும் கம்பியும் இது போலவே என்றுணர்ந்து
கதவை கொத்தி வானத்தில் பறந்துபோகும்
எனினும்
கூண்டுக்குள் மீண்டும் வந்தடையும்
தானியம் பிரிக்கவும் அழகு பார்க்கவும்
Monday 19 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அழகிய கவிதை
இன்று
நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment