Wednesday 30 June 2010

எச்சம்


மரங்கள் அடர்ந்த தெருவில்
பறவைகளின் பேரிரைச்சல் கேட்காவிட்டாலும்
அவற்றின் மெல்லிய கீச்சுக் குரல்களேனும்
கேட்டுக் கொண்டே தான் இருக்கும்

அவ்வழியே கடக்கும் போது
பலர் மீதில்லாவிட்டாலும்
சிலர் மீதேனும்
அவை மென்று கழித்ததன்
எச்சம் படக்கூடும்

அதை "சீ" என்று துடைத்துவிட்டே
கடப்பவர் பலரெனினும்
நின்று அப்பறவைகளின் மேல்
கல்லெறிந்து போகிறவர்களும் உண்டு
ஏதென்று அறியாமல் பறவைகளும்
பேரிரைச்சல் எழுப்பி அடங்கும்
கல்லெறிய முடியாமல் ....


2 comments:

கவிநா... said...

உண்மை தான் அக்கா... ரொம்ப நாள் ஆச்சு உங்க வலைப்பூவுக்கு வந்து... இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு... பாவம் பறவைகள்...

பூங்குழலி said...

வருகை தந்ததற்கும் படித்ததற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கவிநா