Thursday 28 October 2010

என்னவென்று சொல்ல

ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு எச்.ஐ.வி .அப்பா ,அம்மா ,மகன் என்று ..போன மாதத்தில் இவர்கள் வந்த போது ஒரு துக்க செய்தியும் காத்திருந்தது .இவர்களின் ஒரே மகள் ,நோய் விட்டுவைத்தது இந்த சிறுமியை மட்டும் தான் ,ஒரு சாலை விபத்தில் இறந்து போனாள் .

"அவ ஒருத்திக்கு தான் மேடம் ,நோய் இல்லாம இருந்துது .இவளாவது நல்லா இருக்காளேன்னு தான் எப்பவும் மனச தேத்திக்குவேன் .இப்ப அவளும் போயிட்டா .நாம இல்லாம போய்ட்டா கூட அவளுக்கு வேணுமேன்னு இருபத்து ஐஞ்சு பவுன் சேத்து வச்சேன் ,மேடம் .இந்த கஷ்டம் போதாதுன்னு எங்க மாமியார் வேற ,இனிமேல் அந்த நக ஒனக்கு எதுக்குன்னு ,என் நாத்தனாருக்கு கொடுக்க சொல்லுது ,"என்று ஏதேதோ சொல்லி சொல்லி அழுது கொண்டே இருந்தார் .தேறுதல் சொல்ல கூட வார்த்தைகளின்றி அமைதியாக இருந்தோம் .


4 comments:

Jerry Eshananda said...

tragic...

பூங்குழலி said...

ஆமாம் ஜெரி ,ரொம்பவே கொடுமை இது

Radhakrishnan said...

வாழ்க்கை மிகவும் பயங்கரமானது கூட.

பூங்குழலி said...

உண்மைதான் ராதாகிருஷ்ணன்