Friday 15 April 2011

எங்கூரு ...

போன வாரத்தின் சுவாரசியம் இது .ஒரு நோயாளி ,இதுவரை எங்கள் மருத்துவமனையில் வேறு மருத்துவர்களையே பார்த்து வந்தவர் .இந்த முறை என்னை பார்க்க வந்தார் .அதிமுக கரை வேட்டி கட்டியிருந்தார் .தீவிர கட்சிக்காரராக இருக்கிறாரே என்று, சும்மா பேச்சு கொடுத்தேன் .


"என்ன உங்கம்மா இந்த தடவை ஜெயிச்சுருவாங்களா ?"என்று கேட்டதற்கு "ஆமாம் மாறி மாறி வரலையா ?அப்படி பாத்தா ,அம்மா தான இந்த தடவ ஜெயிக்கணும் ?என்று கேட்டார் ."அது சரிதான் ,நிலவரம் எப்படியிருக்கு?"என்றதும் .எலெக் ஷன் கமிஷன் கெடுபிடியா இருக்குறதால அம்மா ஜெயிக்க நெறைய சான்ஸ் இருக்கு .இல்லைன்னா செரமம் தான் ."இதற்கு நாங்கள் ,"சரி ஒங்கம்மா ஜெயிச்சாப்புல பெருசா என்ன செஞ்சுருவாங்க ?"என்று வம்பளக்க ,கோபமான அவர் ,"படிச்சவுங்க ,நீங்க இப்படி சொல்லலாமா ?கருணாநிதி குடும்பத்துக்குன்னு அரசியல்ல இருக்காரு .இந்தம்மாவுக்கு குடும்பமா குட்டியா ?ஊருக்காக அரசியல்ல இருக்குது !அத போயி ..."


அவர் கிளம்பும் போது ,"சரி ஒங்கம்மா ஜெயிச்சவுடன் எங்களுக்கு சுவீட் எடுத்துட்டு வாங்க "என்ற போது ,"கண்டிப்பா கொண்டு வரேன், நீங்களும் மறக்காம வோட்ட போடுங்க ." "ஒங்க தொகுதி எது ?" மதுரையா மதுரைக்கு பக்கத்துலையா ?"மதுரைக்கு பக்கத்துல தான் ,ஓட்டுக்கு மூவாயிரம் ரூவா கொடுத்தாங்களே ,அந்த ஊரு தான் .திருமங்கலம் ."



9 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

>>துரைக்கு பக்கத்துல தான் ,ஓட்டுக்கு மூவாயிரம் ரூவா கொடுத்தாங்களே ,அந்த ஊரு தான் .திருமங்கலம் ."

ஹா ஹா கடைசில வெச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச்

Avargal Unmaigal said...

//சரி ஒங்கம்மா ஜெயிச்சாப்புல பெருசா என்ன செஞ்சுருவாங்க //
அய்யாவுக்கு 2 ஜின்னா அம்மாவுக்கு 4 ஜி இருக்குல....அம்மான்னா சும்மாவா

///?ஊருக்காக அரசியல்ல இருக்குது !அத போயி ..."///
பேருக்காக அரசியல்ல இருக்குது !அத போயி அப்படின்னு சொல்லனும்

///சுவீட் எடுத்துட்டு வாங்க //
அப்படியே அவரு எடுத்து வந்தா தனியா தின்னுடாதிங்கோம்மா நமக்கும் ஒரு பங்கு அனுப்பிச்சு வைங்கம்மா.. இல்லைன்னா உங்களுக்கு வைத்தவலி வந்துரும்.

பூங்குழலி said...

//ஹா ஹா கடைசில வெச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச்//


அவரு தான் எங்களுக்கு பஞ்ச் வைத்தார் .நன்றி செந்தில்குமார்

பூங்குழலி said...

.
//சரி ஒங்கம்மா ஜெயிச்சாப்புல பெருசா என்ன செஞ்சுருவாங்க //
அய்யாவுக்கு 2 ஜின்னா அம்மாவுக்கு 4 ஜி இருக்குல....அம்மான்னா சும்மாவா//

அதனாலே தானே அம்மா ஆர்வமா இருக்காங்க ...

///?ஊருக்காக அரசியல்ல இருக்குது !அத போயி ..."///
பேருக்காக அரசியல்ல இருக்குது !அத போயி அப்படின்னு சொல்லனும்//

பேருக்காக இல்லை பவருக்காக இல்லை சசிக்காக ?
..


///சுவீட் எடுத்துட்டு வாங்க //
அப்படியே அவரு எடுத்து வந்தா தனியா தின்னுடாதிங்கோம்மா நமக்கும் ஒரு பங்கு அனுப்பிச்சு வைங்கம்மா.. இல்லைன்னா உங்களுக்கு வைத்தவலி வந்துரும்.//

அவங்க கட்சி ஜெயிச்சா உங்களுக்கும் சேர்த்தே சுவீட் எடுத்துட்டு வர சொல்றேன் .சபிச்சுராதீங்க

இராஜராஜேஸ்வரி said...

நல்லா கேட்டீங்க ஒரு கேள்வி!!

குடந்தை அன்புமணி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

பூங்குழலி said...

நல்லா கேட்டீங்க ஒரு கேள்வி!!



நிறைய நேரம் நாமளே இப்படி வாயைக் கொடுத்து வம்பை வாங்கிக்கறோம் ...என்ன செய்யறது ?

பூங்குழலி said...

http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது

எனக்கு ரொம்ப இளகின மனசு அதிர்ச்சி எல்லாம் தாங்காது ..பட்டுன்னு விஷயத்த சொல்லுங்க