Tuesday 12 March 2013

என் இதயம்

 

என் இதயம் கனத்திருக்கிறது
பல பாடலால் 
கனிந்த கனிகள் அழுத்தும்
கனிமரம் போல
இருந்தும்  ஒரு பாடலை
தரவே முடியாது நான்
என் பாடல்கள்
என்னுடையவை  இல்லை

ஆனாலும்
மாலையில் அந்தியில்
அங்கும் இங்கும்  அந்துப்பூச்சிகள்
உலாவும்  வேளையில்  
சாம்பல் பொழுதில்
கனி விழுந்திருந்தால்
எடுத்துக் கொள் .
எவர்க்கும் தெரியாது 





 "My Heart Is Heavy"
By Sarah Teasdale 
My heart is heavy with many a song
Like ripe fruit bearing down the tree,
But I can never give you one --
My songs do not belong to me.

Yet in the evening, in the dusk
When moths go to and fro,
In the gray hour if the fruit has fallen,
Take it, no one will know.



7 comments:

மகேந்திரன் said...

அருமையான மொழிபெயர்ப்பு...
படிக்கையில் மனம் இனிக்கிறது...

பால கணேஷ் said...

இதயம் கனத்திருக்கிறது என்று துவங்கிய கவிதை என் இதயத்தை ரசிக்க வைத்தது! நல்ல கவிதை! சுவை குன்றாத மொழிபெயர்ப்பு! நன்று!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நல்ல மொழி பெயர்ப்பு...

நன்றி...

பூங்குழலி said...

மிக்க நன்றி மகேந்திரன் .மூலக் கவிதையின் இனிமை குன்றாமல் வந்திருப்பது மகிழ்ச்சி

பூங்குழலி said...

:))))))))சீனி

பூங்குழலி said...

வழமை போல் உங்கள் கவிதை போலான பாராட்டுக்கு நன்றி கணேஷ் .

பூங்குழலி said...


மிக்க நன்றி தனபாலன்