Friday 27 June 2008

அறியாமை ?????????????

ஒரு முறை இரு முறை அல்ல நான் பல முறை கண்டது இது .பெண்கள் வயதை சொல்ல பிரியப் படமாட்டார்கள் ,சொல்ல மாட்டார்கள் ,குறைத்து சொல்வார்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம் ,ஆனால் வயதே தெரியாமல் இருக்க முடியுமா ?
இன்னும் நம் கிராமங்களில் வாழும் பல பெண்கள் வயது ஒரு தோராயமான அளவு தான் .
பலருக்கு முப்பதை தாண்டி சொல்லவே தெரியாது ...
இன்னும் சிலர் மாமியார் (?)அல்லது கணவனைக் கேட்டே சொல்வார்கள் ...
இவர்களாவது பரவாயில்லை சிலர் நம்மையே கேட்பார்கள் ........


ஒரு பாட்டி என்னிடம் சொன்னார் 'நீ என் பேத்தி மாதிரி ,உனக்கு என்ன தோணுதோ ?அதையே போட்டுக்கோ ??'


வேடிக்கையாய் தோன்றினாலும் இவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது ?
இவர்கள் வயதை தெரிந்து வைத்திருக்கும் அளவிலான அறிவுடைமை கூட
இவர்களுக்கு மறுக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .