Saturday 28 June 2008

இயலாமை

கடமலைக் குண்டு ,


என் மருத்துவப் பணியில் ஒரு விழிப்புணர்வு தந்த இடம் .பெரிய மருத்துவமனைகளையும் அதன் அலங்காரங்களையும் அறியாத, அவற்றை நெருங்க முடியாத நோயாளிகளின் தேவைகளை நான் உணர்ந்தது இங்கு தான் .


ஒரு மூதாட்டி -வயது அறுபது தாண்டியிருக்கும் --
தலை சுற்றுகிறது என்று சொல்லி வந்தார் ,சர்க்கரையின் அளவோ 400 உணவு பற்றி சொல்லும் போது சொன்னேன் ,அரிசி உணவுகளில் மாவுச் சத்து அதிகமாக இருப்பதால் கோதுமை போன்ற பிற தானியங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் .அவர் கூறினார் ,'அரிசி கிலோ 4 ரூ விக்குது ,
கோதுமையும் கேழ்விரகும் கிலோ 8ரூ விக்குது ,நா வாங்கும் 40ரூ கூலியிலே சோறு தின்னா கட்டுமா ?கோதும தின்னா கட்டுமா ?'


இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் தானம் கட்டளையின் நிறுவனர் திரு.வாசிமலை கூறினார் , இவர்கள் பழக்கங்களுக்கு ஏற்றவாறு உணவு வகைகளை இவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் ,(ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது)அதை விட சிறப்பான வழி, இவர்கள் அளவிலான வசதிகளுடன்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் உடன் இவர்களை உரையாடச் செய்து அவர்கள் பின்பற்றும் உணவுகளை இவர்களும் பின்பற்றச் செய்யலாம் என்று.