Monday 29 September 2008

பாட்டி வீடு

என் பாட்டி வீட்டில் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்தியது அங்கிருந்த கழிவறை தான் .பாட்டி வீட்டிற்கு எதிரில் வீட்டிற்கு வெளியே இருந்தது .உள்ளேயே தண்ணீர் தொட்டி கூட உண்டு .கூரை இருந்ததாக நினைவில்லை .

இதில் என்ன ஆச்சரியம் என்று நினைக்கலாம் .என் அம்மாவின் அம்மா வீடு திருநெல்வேலி டவுனில் இருந்தது .நாகரீகம் சற்று வளார்ந்து விட்டதாகக் கருதக் கூடிய ஊரில் இருந்த அந்த வீட்டில் கழிவறை கிடையாது .கழிவறை என்று பெயரிடப் பட்ட அறையில் ஒரு குட்டி சுவர் இருக்கும் அவ்வளவே .எறும்புகள் மொய்க்கும் .நினைத்தாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது இப்பொழுது கூட .காலையில் ஒரு பெண் வந்து ஒரு தென்னம் மட்டையை வைத்து அத்தனையும் சுத்தம் செய்து ஒரு வண்டியில் அள்ளிக் கொண்டு போவார் .உயிரே இருக்காது அவர் முகத்தில் .பின்பு இப்படிப்பட்ட இழிவான அருவருப்பான பணியை காலம் காலமாக செய்யும் அவருக்கு மனநிலை எப்படி இருக்கும் ?வெட்கக் கேடான விஷயம் இது .ஆனால் அந்த சிறு வயதில் அவரை கண்டாலே
அருவருப்புடன் ஒதுங்கவே தெரிந்தது .


என் பாட்டி வீட்டில் 1965 லிருந்து 1968 குள் கழிவறை கட்டப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன் . ஏனென்றால் அப்போது தான் என் பெரியப்பாவிற்கு திருமணம் ஆகியது .என் பெரியம்மா சென்னையில் வளர்ந்தவர் .பட்டிணத்திலிருந்து மருமகள் வருவதால் இந்த கழிவறையை கட்டினார்களாம் .


1 comment:

shanevel said...

அட புதுப்பொண்ணு(உங்க பாட்டிதான்) வர்றாங்கன்னு புதுசா பாத்ரூம் கட்ணாங்களா?... நல்லது. இப்பலாம் வாஸ்து தான் பேஷன்!