புதிதாக சிகிச்சைக்கு வந்தனர் ஒரு தம்பதியினர் .
பேச ஆரம்பிக்கும் முன்னே அழ ஆரம்பித்தார் மனைவி .
தன் கணவருக்கும் (பள்ளி ஆசிரியர் இவர் ) அவருடைய மாணவரின் தாய்க்கும் தொடர்பு இருந்ததாம் (இவர் ஒரு விதவை ) .
நோயுற்று , இறக்கும் தறுவாயில் அந்தப் பெண் இவரை அழைத்து வரச் செய்து ,"எனக்கு எச் .ஐ.வி நோய் உண்டு .இது உன் கணவருக்கும் தெரியும் .என் வறுமை காரணமாக நான் இவரோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலரோடும் தொடர்பு வைத்திருந்தேன் . இவரை ஆணுறை உபயோகிக்கும் படி கட்டாயப் படுத்தினேன் .இவர் ஒப்புக்கொள்ளவில்லை .ரத்த பரிசோதனையாவது செய்துக் கொள்ள சொன்னேன் .அதற்கும் இவர் சம்மதிக்கவில்லை .உங்களோடு தொடர்பு கொள்வதையாவது தவிர்க்க சொன்னேன் .அதையும் இவர் கேட்டிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை .இவருக்கு நிச்சயம் எனக்கிருந்த நோய் வந்திருக்கும் .உங்களுக்கும் வந்திருக்கலாம் .கண்டிப்பாக நீங்கள் ரத்த சோதனை செய்து கொள்ளுங்கள் "என்று கூறியதாகவும் அதன் பின்னரே இருவரும் சோதனை செய்ததில் இருவருக்கும் நோய் பாதித்திருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார் .
என்ன அவலம் .....தன் சுகத்திற்காக தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுக்கும் இவர் போன்றோரை என்ன செய்தால் தகும் .
இறுதியாக அந்த மனைவி சொன்னார் ,"இவர் இறந்து நான் வாழ்ந்தால் ,நான் ஒருவேளை வசதியாக வாழக் கூடும் என்ற கெட்ட எண்ணத்திலேயே இவர் இவ்வாறு செய்திருக்கிறார் ," என்று .
உண்மைதானோ ?
3 comments:
இப்படியும் சிலர்(-:
என்ன அவலம் .....தன் சுகத்திற்காக தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுக்கும் இவர் போன்றோரை என்ன செய்தால் தகும் .
யாரைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை
இறுதியாக அந்த மனைவி சொன்னார் ,"இவர் இறந்து நான் வாழ்ந்தால் ,நான் ஒருவேளை வசதியாக வாழக் கூடும் என்ற கெட்ட எண்ணத்திலேயே இவர் இவ்வாறு செய்திருக்கிறார் ," என்று .
ஒன்னுமே புரியலீங்க
Post a Comment