சட்டென்று எதையும்
சொல்லிவிட முடிவதில்லை
இப்பொழுதெல்லாம் ..
எதைக் குறித்தேனும்
எவர் பொருட்டேனும்
நிதானிக்க வேண்டியிருக்கிறது
நிதானித்தே பேசிப் பயின்றதில்
என் சொற்கள்
காற்றில் அலைந்தபடியே இருக்கின்றன
உன்னுடையவை நாங்கள்
என என் காதில் கிசுகிசுத்தப்படி .........
Monday 13 April 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை.
வாழ்த்துகள்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி
Post a Comment