Tuesday 28 April 2009

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்

படத்துக்கு பேர் நல்லா தான் அமைஞ்சிருக்கு.


நிறைய பாரதிராஜா படங்கள் ஞாபகத்துக்கு வருது படம் பாக்கும் போது ...

முதல் பாதியில் முட்டத்தை படம்பிடிச்சிருக்காங்க .அழகா தான் இருக்கு .


ரெண்டாவது பாதியில் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு போயிட்டோம் ,இனிமுடிக்கணுமே ன்னு முடிச்சிருக்காங்க .பருத்தி வீரன் நல்லா ஓடினது இந்தகட்டத்தில ஞாபகம் வந்திருக்கும் ன்னு நினைக்கிறேன் .

நாயகன் நாயகி நடிச்சிருக்காங்க !அப்புறம் அந்த நாயகனோட நண்பர்கள் ,வில்லனுக்கு அக்கா இவங்களும் நல்லாதான் நடிச்சிருக்காங்க .


ரெண்டு குத்துப் பாட்டு ,அதில வில்லனுக்கு ஒன்னு ..எதுக்குன்னு தெரியல ?அதிலேயும் வாயசைப்பு ரொம்ப மோசம் .அப்புறம் மூக்கை சிந்தி சாம்பாரில போடுறது ,சடங்காறதுன்னா என்ன ? மாதிரி சில அருவருப்பான விஷயங்கள் ....
பாட்டும் பின்னணி இசையும் படத்துக்கு பொருந்தல ...


அப்பப்ப சில பழைய படங்கள டிவியில காட்டுறாங்க(கரகாட்டகாரன் ) ,எதுக்குன்னு புரியல (இதையாவது பாத்து சந்தோஷப்படட்டும்ன்னு நெனச்சாங்களோ என்னமோ )


மொத்ததுல நிறைய பாரதிராஜா படங்கள இருந்து நிறைய காட்சிகள் உருவி கடைசியில பருத்தி வீரன்ல இருந்து கொஞ்சம் உருவி படம் எடுத்த மாதிரி இருந்துது .
முதல் பாதியில் எடுத்த சிரமத்தில் கொஞ்சமாவது இரண்டாவது பாதியில் எடுத்திருக்கலாம் .


No comments: