Saturday 25 April 2009

தனிமை

தன்னந்தனியாக திரிந்து அலைகிறேன்
தனிமை வேண்டும் என தவம் செய்யக் கோரி

எவரும் எட்டாத மலை சிகரங்களில்
எவரும் அண்டாத வனப் பிரதேசங்களில்

எவர் சுவடும் இல்லாத கடற்கரை வெளிகளில்
எவரும் நோக்கிராத பூட்டிய அறைகளில்

எங்கும் சிக்காமல் நான் தேடும் தனிமை
ஏன் கிட்டவில்லை என நின்று பார்க்கையில்

என்னுடன் நானே உலவித் திரிகையில்
எங்ஙனம் கிட்டும் எவருமற்ற தனிமை ?



No comments: