Tuesday 4 August 2009

அம்மன் கொடை

அடுத்த நாள் ,கிடா வெட்டி சாமி கும்பிடுவார்களாம்.இதோடு மூன்று நாள் கொடை நிறைவு பெற்றது .

கொடை பார்க்க சென்றது ஒரு சிலிர்ப்பான அனுபவம் தான் .ஆனால் பலரைப் போல விடிய விடிய பார்க்க சிரமமாக தான் இருந்தது .முதல் நாள் மட்டும் இரவு பன்னிரண்டு மணி வரை பார்க்க முடிந்தது.

இந்த சாக்கில் ஊரையும் கொஞ்சம் சுற்றிப் பார்க்க முடிந்தது .உறவினர் பலரை சந்திக்கவும் முடிந்தது . என் அப்பாவின் அத்தை மகள் வீட்டில் நுங்கு (முழுதாக கொடுத்தார்கள் .நோண்டித் திங்க ஸ்பூனும் கொடுத்தார்கள் )சாப்பிட்டதும் ,பத்தி (பத்திரக்காளி என்பதன் சுருக்கம் இது .அப்பாவின் நெருங்கிய நண்பர் வள்ளிநாயகம் பெரியப்பாவின் மனைவி இவர் ) பெரியம்மா ரைஸ் மில்லில் இரவில் பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சாப்பிட்டதும் இன்னமும் நாவிலும் மனதிலும் தித்திப்பாய் ...


No comments: