Monday 10 August 2009

அனுபவம் புதுமை

நேத்து ஒரு தொலைக்காட்சிக்காக என் மகனுக்கு கண்ணன் வேஷம் போட வேண்டியிருந்தது .இதுக்காக உடை மத்த சமாச்சாரம் எல்லாம் வாங்க வடபழனியில "திலகம் டிரஸ் மெட்டிரியல்ஸ்" லுக்கு சனிக்கிழமை போனோம் .சின்ன பொந்து மாதிரி இருந்த கடையில வள்ளுவர்ல இருந்து ஸ்பேஸ் சூட் வரைக்கும் வச்சிருந்தாங்க .நாங்க போனப்ப இன்னொரு அம்மா அப்பாவும் அவங்க கண்ணனுக்கு வேணுங்கறத எடுத்திட்டு இருந்தாங்க .



நா பாத்திட்டு இருக்கும் போது இன்னொரு அம்மா அப்பா வந்தாங்க .அவங்க பையனுக்கு அடுத்த மாசம் ஃபான்ஸி டிரஸ்ஸாம் .அதுக்கு ஸ்பேஸ் சூட் பாக்க வந்திருந்தாங்க .கடைக்காரர் ஒரு மாசம் முன்னால புக் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார் . இதுக்கு தேவையானது எல்லாமே இருக்கான்னு பாத்தாங்க கொஞ்ச நேரம் .



அப்புறம் நாங்க கண்ணன் டிரஸுக்கு எடுக்குற நகை அத இத பாத்ததும் ராஜா வேஷம் போடலாம்ன்னு தோணியிருக்கும் போல .கட்டபொம்மன் வேஷம் போட்டிரலாமான்னு பேசிக்கிட்டாங்க .உடனே கடைக்காரர் சொன்னார் ,"போடலாம் ஆனா பரிசு கிடைக்காது .அதெல்லாம் ஸ்கூலிலேயே சொல்லுவாங்க , விடுதலை போராட்ட வீரர் வேஷம் போடனும்ன்னு .அப்ப போட்டாத் தான் பரிசு கிடைக்கும் ."




உடனே இவங்க கொஞ்ச நேரம் பேசிக்கிட்டாங்க . அப்புறம் ,"கலாம் வேஷம் போடலாமா ?"கடைக்காரர் சொன்னார் ," அம்மா ,இப்பெல்லாம் மரம் ,பழம்ன்னு தான் வேஷம் போடுறாங்க .அப்படி புதுசா போட்டாத் தான் பரிசு கிடைக்கும் .அப்துல் கலாமெல்லாம் அவுட் ஆஃப் ஃபாஷன் "