நீண்டதொரு தவம் செய்து
வரமாக அதைக் கோரி பெறும்
அவகாசங்கள் எனக்கில்லை
சொல்லிடுக்கில் காயப்பட்டு
அவசரமாய்
என் கன்னத்தில் கோள் சொல்லி
ஓடி வரும் கண்ணீரும்
முன் அறிவிப்பாய் மனவலி உணர்த்திவிடும்
முக மாற்றமும்
இனி என்றும் வராமல் உறையும் படி
அவசரமாய் எனக்கொரு சாபம் வேண்டும்
3 comments:
அருமையான களம்.. சொல்லப்படுவது தெளிவாகச் சொல்லப்படுகிறது..
ஆனால், ஆனால்...
அது சாபமா????? அல்லது வரமா?????
//என் கன்னத்தில் கோள் சொல்லி
ஓடி வரும் கண்ணீரும்//
அருமையான வரிகள்.
//அவசரமாய் எனக்கொரு சாபம் வேண்டும்//
இந்த வரியின் மூலம், உங்களிடத்தில் எங்கள் ஊர் பாரதியைக் காணுகிறேன். வாழ்த்துக்கள்!
உழவன்
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com
ரசித்ததற்கும் வாழ்த்தியதற்கும் நன்றி உழவன்
Post a Comment