Thursday 16 April 2009

தாத்தா - பாட்டி

வைத்தியலிங்கத் தாத்தாவை நான் பார்த்ததே இல்லை .நான் பிறப்பதற்கு சரியாக ஐம்பது நாட்களுக்கு முன்னர் இறந்து போனார் இவர் .இவரின் புலமையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ,குறிப்பாக கம்பராமாயணத்தில் .

ஆலடிப்பட்டியில் மளிகை கடை வைத்திருந்தாராம் .பாட்டி சொல்வார் ,"பாக்கி வச்சிருப்பான் ,கடையில வந்து நின்னுட்டு ராமாயணக் கதை கேப்பான் .அத சொல்ல ஆரம்பிச்சதும் இவருக்கு கடையும் நெனப்பிருக்காது கணக்கும் நெனப்பிருக்காது .இப்படியே கணக்கு மறந்து தான் கடையையே மூட வேண்டியதாப் போச்சு .""கத தான் நல்லா சொல்வாரு .வேற என்னத்த கண்டாரு "

இப்படி பல நேரங்களில் ராமாயணக் கதை சொன்ன தாத்தா எல்லாவற்றையும் மறந்து அதில் திளைத்துப் போனதை பற்றி அங்கலாய்த்திருக்கிறார் பாட்டி .


2 comments:

சந்தனமுல்லை said...

இனிய நினைவுகள்!

பூங்குழலி said...

ஆமாம் ,திரும்பிப் பார்க்கையில் பாட்டி பிரமிப்பூட்டுகிறார்