Thursday 16 July 2009

அம்மன் கொடை

கொட்டடிக்க ஆரம்பித்த உடன் கூட்டத்தை ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது .

சுடலைமாடசாமி கோவிலருகில் ஒரு கூட்டமும் ,கரகம் பார்க்க தயாராக ஒரு கூட்டமும் என்று கூட்டம் பிரிந்து கிடந்தது .கொட்டடித்தவுடன் இரண்டு மூன்று பேர் சாமி ஆட ஆரம்பித்தார்கள் .ஆடுபவர்களுக்கு அலங்காரம் நடந்தது .சலங்கை கட்டிய அந்த கம்பும் சலங்கை வைத்த கருப்பு அரைக்கால் சட்டையும் போடாமல் நேரில் வந்தால் நிஜ சுடலைமாடனையே எவருக்கும் அடையாளம் காண முடியாது .இப்படியாக சுடலைமாடன்கள் ஆட ஆரம்பிக்கவும்
வழக்கம் போல எல்லோரும் மாலை போடவும் குறி கேட்கவும் தயாராக நின்றனர் .ஆனால் சுடலைமாடனின் ஆட்டம் அன்றைய நிகழ்ச்சிகளில் முக்கியமானது இல்லை போலும் .ஆரம்பித்தஒரு அரை மணி நேரத்தில் சாமியாட்டம் முடிந்து போனது .

கூட்டம் கலையும் முன்னரே வில்லுப்பாட்டுக்கென ஒரு மேடையும் கரகாட்டத்திற்கு இடமும் தயாராகிக் கொண்டிருந்தது .


No comments: