Saturday 18 July 2009

அம்மன் கொடை




ஊரே வாய் பிளந்து பார்த்திருக்க ,இரண்டு கரகங்கள் எடுத்து வந்து வைக்கப்பட்டன .இரண்டு பெண்களும் ஒரு ஆணும் வந்தனர் .

மினு மினு வென ஒரு ஒப்பனை .
நல்ல கருப்பு நிறத்தில் போர்வையை போர்த்திக் கொண்டிருந்தனர் .
விலக்கிய போது சரியான அரைகுறை ஆடையில் இருந்தனர் .
கரகத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு தலையில் தூக்கி வைத்து ஆட ஆரம்பித்தனர். அந்த ஆண் ,சும்மா கரகம் இல்லாமலேயே ஆடினார் .
சிறப்பாக ஆடினார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது ஆனால் முன்னும் பின்னுமாக நடந்து ஆடிக் கொண்டே இருந்தனர் .

இப்போது மூன்றாவதாக ஒரு பெண் வந்து நின்று கொண்டிருந்தார் .இன்னும் கொஞ்சம் அதிக ஒப்பனையுடன் .ஆட்டம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டே இருந்தார் .இவர் ஆட ஆரம்பித்தவுடன் தெரிந்தது ஏன் கூட்டம் முழுவதும் இங்கே காத்துக் கிடக்கிறதென்று .

அந்த மூன்றாவது பெண்ணும் அந்த ஒரு ஆணும் சேர்ந்து ஆடிய ஆட்டம் ஆபாசமாக இருந்தது என்று சொன்னால் கூட போதாது .கூட்டத்தினுள் அந்த பெண்ணை தூக்கிப் போட்டு ,இழுத்து என்று காணக் கூசும் நடனமாக அது இருந்தது .நேரம் ஆக ஆட்டமும் மோசமாகிக் கொண்டே இருந்தது.கூட்டம் என்னமோ சங்கடங்கள் ஏதும் இன்றி தான் பார்த்துக் கொண்டிருந்தது .எங்களுக்கு தான் கூச்சமாக இருந்தது போலும் ,கிளம்பி விட்டோம் .


காலையில் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது ,அதிகாலை மூன்று மணிக்கு ஆட்டம் முடிந்ததாக சொன்னார்கள் .நேரம் ஆக ஆக அதிகம் ஆபாச பேச்சுகளும் இருந்ததாகவும் சொன்னார்கள் .நாங்கள் கரகம் சுமந்தே ஆடவில்லையே என்றதற்கு ,இப்படிப்பட்ட ஆட்டம் ஆடுபவர்களுக்கு தான் அதிகம் வாய்ப்பு கிடைக்கிறதாம் .இவர்களை கஷ்டப்பட்டு தேடி புக் பண்ணி வருகிறார்களாம் .

என் உறவுப் பெண் ஒருவர் சொன்னார் ,"நாங்களெல்லாம் யாரும் இத பாக்க போறதில்ல .ஊருல இருக்க வயசானவங்க தான் இத ஒக்காந்து விடிய விடிய பாப்பாங்க ."


No comments: