Wednesday 5 August 2009

அனுபவம் புதுமை

நேத்து சாயங்காலம் .வீட்டுகிட்ட ஒரு கோவில் .அதுகிட்ட நடந்து போய்கிட்டிருந்தேன் .ஆள் நடமாட்டம் அதிகமில்ல .ஓரமா ஒரு சுமோ நின்னுக்கிட்டுருந்தது .திடீர்ன்னு ஒருத்தர் வந்து ,"சிஸ்டர் கொஞ்சம் பொடவை கட்டிவிடமுடியுமா "ன்னு கேட்டார்.பாத்தா கார் கிட்ட பொண்ணு .பதச்சு போயி நின்னுக்கிட்டுருந்தது .

"கோவிலுக்கு வந்தோம் .சுத்தி முடிச்சு வரதுக்குள்ள புடவை கழண்டிருச்சி ,கொஞ்சம் கட்டிவிட முடியுமா ?பிளீஸ் ?"எனக்கா சந்தேகம் .எதுக்கு நம்மள நிப்பாட்டி கேட்கணும் .நா புடவை கட்டியிருந்தா கூட பரவாயில்லை .நானே சுரிதார் போட்டிருக்கேன் .கோவிலுக்குள்ள எத்தனையோ பொம்பளைங்க இருந்திருப்பாங்களே ?ன்னு.
"வெளிய எங்கயாவது போறீங்களா "ன்னு கேட்டேன் .
"இல்ல வீட்டுக்கு தான் போறோம் .
"அப்புறம் என்ன, கார்ல ஏறி உக்காந்து போக வேண்டியது தானே ?வீட்டில போய் கட்டிக்கலாம் ."
"இல்ல சிஸ்டர் ,பிளீஸ் கொஞ்சம் கட்டி விட முடியுமா ?இப்படியே போக முடியாது ."

சரி, துணிஞ்சிற வேண்டியது தான்னு பக்கத்தில போய் நின்னா அந்த பொண்ணு அழத் தயாராகிக்கிட்டுருந்தது ."எனக்கு கட்ட தெரியாது .சுரிதார் போடுறேன்னு சொன்னேன் .இவரு கேக்கல ,"ன்னு புலம்பிச்சு .வயசு கூட பதினாறில் இருந்து பதினெட்டுக்குள்ள தான் இருக்கும் .கார் மறைவுல நிக்க வச்சு (பாவம் வெக்கமா வேற இருந்தது போல ) கட்டி விட்டேன் .

வித விதமா சாரி பின் வேற குத்தியிருக்கு .புடவை வேற வெந்தைய கலருல வளவள துணி .வழுக்கிக்கிட்டே போச்சு .ஒவ்வொரு மடிப்பு எடுக்கும் போதும் ,"தாங்க்ஸ் ஆண்ட்டி ,தாங்க்ஸ் ஆண்ட்டி "ன்னு சொல்லிக்கிட்டே இருந்திச்சு. மடிச்சு "சொரிகிக்கோமா" ன்னு சொன்னா ,அத கூட பாவம் சரியா செய்ய தெரியல .அவரு வேற ,"சிஸ்டர் முந்தானையையும் சரி பண்ணி விட்டுருங்க "ன்னு சொல்றார்.அதையும் சரி பண்ணி விட்டுட்டு ,"சுமாரா கட்டியிருக்கேன் .அப்படியே ஏறி உக்காந்து வீட்டுக்கு போயிடுங்கன்னு "சொல்லிட்டு வந்தேன் .அவங்க சொன்ன தாங்க்ஸ் காத்துல தொரத்திக்கிட்டே வந்துது .


7 comments:

துளசி கோபால் said...

அடக் கடவுளே!!!!

ரெடிமேட் புடவை வந்துருச்சு. அதை வாங்கிக்கிட்டாச் சமாளிச்சுக்கலாம்.

பூங்குழலி said...

ஆமாம் ,ஒரு சுரிதாரையாவது போட்டு கூட்டிட்டு வந்திருக்கலாம்

Anonymous said...

உங்களை அள்ளி உள்ளே போட்டுட்டு போயிருந்தா என்ன செய்ய முடியும்

பூங்குழலி said...

உங்களை அள்ளி உள்ளே போட்டுட்டு போயிருந்தா என்ன செய்ய முடியும்

எனக்கும் பயமா தான் இருந்தது ..ஆனால் என்னைய கடத்திட்டு போயி யாருக்கு என்ன ஆகப் போகுது ?ங்குற தைரியம் தான்

ஆயில்யன் said...

//பூங்குழலி said...

உங்களை அள்ளி உள்ளே போட்டுட்டு போயிருந்தா என்ன செய்ய முடியும்

எனக்கும் பயமா தான் இருந்தது ..ஆனால் என்னைய கடத்திட்டு போயி யாருக்கு என்ன ஆகப் போகுது ?ங்குற தைரியம் தான்
///

வேண்டாம் அக்கா வேண்டாம் இந்த மாதிரி விபரீத வெளையாட்டு !

ஆயில்யன் said...

//எனக்கு கட்ட தெரியாது .சுரிதார் போடுறேன்னு சொன்னேன் .இவரு கேக்கல ,"ன்னு புலம்பிச்சு .வயசு கூட பதினாறில் இருந்து பதினெட்டுக்குள்ள தான் இருக்கும் .கார் மறைவுல நிக்க வச்சு (பாவம் வெக்கமா வேற இருந்தது போல ) கட்டி விட்டேன் .//

அம்புட்டு சின்ன பொண்ணு ஏன் புடவையெல்லாம் டிரை பண்ணுது பாவம் !

Nat Sriram said...

பதிவை விட இந்த கமெண்ட் பிடித்திருக்கிறது..:)

//எனக்கும் பயமா தான் இருந்தது ..ஆனால் என்னைய கடத்திட்டு போயி யாருக்கு என்ன ஆகப் போகுது ?ங்குற தைரியம் தான்//