இது ரொம்ப வருஷங்களுக்கு முன்னால நடந்தது .என் பெரிய மகனுக்கு அஞ்சு வயசு இருக்கும் அப்ப .இவனும் கத சொன்னா தான் தூங்குவான் .அதவும் நெறைய சொல்லணும் .நெறைய நேரம் எங்கப்பாவோட உக்காந்து டிஸ்கவரி சேனல் பார்ப்பான் .
இவனுக்கு முதல் முறையா வெறகு வெட்டி கதைய சொல்றேன் .தண்ணிக்குள்ள கோடாலி விழுந்ததும் வெறகு வெட்டி ஓ ன்னு அழுதான் ன்னு நான் சொல்றேன் .இவன் கேக்குறான் ,
"எதுக்கு அழுதான் ?"
"கோடாலி இல்லைனா வெறகு வெட்ட முடியாது .வெறகு வெட்டி விக்கலைன்னா இவனுக்கு காசு கெடைக்காது அதுக்குத் தான் .புதுசு வாங்கவும் காசு இல்ல."
"அதுக்கு எதுக்கு அழனும் ?டிஸ்கவரி சேனல்ல கையில காலில எதையோ மாட்டிக்கிட்டு தண்ணிக்குள்ள போறாங்களே ,அது மாதிரி போயி எடுத்திட்டு வர வேண்டியது தானே ?"
Thursday 20 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஹா ஹா ஹா ...
Post a Comment