Thursday 27 August 2009

குருதட்சனை




எண்பது வயதை கடந்தவர் திரு.வெங்கடராமன் என்பவர் . தமிழாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் .அதை விட முக்கியமாக தன் மாணவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் .2007 ல் ஒரு பழைய மாணவர்களின் சந்திப்பின் போது இவர் கடன் தொல்லை காரணமாகவும் வாடகை பிரச்சனை காரணமாகவும் தன் ஓய்வூதியத்தில் சமாளிக்க முடியாமல் சிரமப்படுவதை அறிந்த இவரின் மாணவர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தனர் .




அதன்படி இவரின் மாணவர்கள் மற்றும் மாணவரல்லாதவர்களின் பங்களிப்போடு பத்து லட்சம் ரூபாய் சேர்க்கப்பட்டது .இதில் நாமக்கல் அருகே குருசாமிபாளையம் என்ற ஊரில் நிலம் வாங்கி இதில் இரண்டு மாடி வீடும் கட்டப்பட்டது ."குருநிவாஸ் " என்று இதற்கு பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது . இந்த வீட்டை தங்கள் ஆசிரியருக்கு காணிக்கையாக்கியிருக்கும் மாணவர்கள் ,அதை இந்த வருடம் ஆசிரியர் தினத்தன்று அவரிடம் முறைப்படி ஒப்படைக்கவிருக்கிறார்கள் .




ஆசிரியர் மீது மரியாதை இல்லாத மாணவர்கள் ,மாணவர்கள் மீது அதிகம் ஈடுபாடு இல்லாத ஆசிரியர்கள் என்று பரவலாக குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிற இன்றைய காலகட்டத்தில் ,ஒரு ஆசிரியருக்கு அதுவும் தமிழாசிரியருக்கு நன்றி பாராட்டியிருக்கும் இந்த மாணவர்களை பாராட்டுவோம் .நன்மக்களாய் தன் மாணவரை உருவாக்கிய அந்த ஆசிரியரையும் போற்றுவோம் .


4 comments:

Jerry Eshananda said...

மனசை கிள்ளும் பதிவு, சபாஸ்.

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

சந்தனமுல்லை said...

நல்ல பகிர்வு பூங்குழலி! அந்த ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! இதே போல நெய்வேலி ஆசிரியையைக்கும் அவரது மாணவர்கள் கௌரவித்ததாக வாசித்தேன்!

பூங்குழலி said...

நன்றி ஜெரி ,சந்தனமுல்லை