Monday 15 March 2010

சட்டசபை திறப்பு விழா

சனிக்கிழமை அன்று நடந்து முடிந்த கோலாகல விழாவில் என் மனதில் பதிந்த சில நிகழ்வுகள் ...


1.தமிழக முதல்வர் கைத்தாங்கலாக என்றாலும் மேடைக்கு நடந்தே வந்தது .
2.உள்ளே சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேட்டரி கார் .
3.சோனியா காந்தி கட்டியிருந்த சிம்பிளான அழகான ஒரியா ? காட்டன் புடவை
4.மேடையிலும் பார்வையாளர் தடுப்புகளிலும் நிரம்ப தெரிந்த மங்கலமான மஞ்சள்
5.முதல்வர் "இந்திராவின் மருமகளே ,இந்தியாவின் திருமகளே" என்று அடுக்கு ? மொழியில் பாராட்டிக் கொண்டிருக்கும் போது ,அதை கவனியாமல் சோனியா கையிலிருந்த பேப்பர் கட்டில் (முதல்வர் உரையின் மொழிபெயர்ப்பு ?) ஏதோ தேடிக் கொண்டிருந்தார் .இதை மீண்டும் மீண்டும் கேட்டு அவருக்கும் அலுத்து விட்டதோ என்னவோ ?
6.எனது மருத்துவக் கல்லூரி ஆசிரியர் டாக்டர் .சுதா சேஷய்யன் .சட்ட சபை உறுப்பினர்கள் யாரையாவது தொகுக்க சொல்லியிருக்கலாம் ?
7.விழா மலரை சோனியா சபாநாயகருக்கு வழங்குவார் என்று இருமுறை இரு மொழிகளில் சொல்லியும் சோனியா அதை வாங்கி சட்டென்று பின்னால் கொடுத்தது .
8.எதிர்கட்சிகள் என்று எவரும் பெரிதாக தென்படாதது .அம்மா ஒருவேளை திடீர் பிரசன்னமாகியிருந்தால் விழா நிஜத்தில் களை கட்டியிருக்கும்
9.சோனியா காந்தியின் பொருத்தமான பேச்சு ,நிகழ்வுக்கு பொருத்தமாக இருந்தது .
10.முதல்வர் ஏனோ புலம்பித் தள்ளினார் .கூட்டணியை உடைக்க சதி செய்கிறார்கள் என்று ஒரே புலம்பல் + சுய பிரச்சாரம் அவர் பேச்சில் .
11.சோனியாவும் பிரதமரும் மறக்காமல் காங்கிரஸ் முதல்வர்களையும் எம்.ஜி ஆரையும் நினைவு கூர்ந்தது .
12.பிரதமர் ,சி.சுப்பிரமணியம் நாட்டின் பசியைப் போக்க பாடுபட்டார் ,எம்.ஜி.ஆர் ஏழைகளின் பசியைப் போக்க சத்துணவு திட்டம் கொண்டுவந்தார் ,கருணாநிதி இப்படியொரு பிரமாண்ட சட்டசபையை கட்டியிருக்கிறார் என்று சொன்னார் .அவர்கள் மக்கள் தேவைகளுக்காக பாடுபட்டார்கள் ,இவர் காசை கொட்டி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று குத்தி காட்டுகிறாரோ என்று தோன்றியது .
13.அ.தி.மு.க மேடை போல் பிற தலைவர்கள் கீழேயே அமர்ந்திருந்தது .
14 . எல்லாவற்றையும் விட ,குறிப்புகளை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு அசத்தலாக பேசக் கூடிய தமிழக முதல்வர் ,முழு பேச்சையும் எழுதிக் கொண்டு வந்து வாசித்தது .வயதாகி விட்டதையா ,வயதாகி விட்டது :(


இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் ,புதிய சட்டசபையை கட்டியதை பாராட்டி விருது வழங்கும் விழாக்கள் எப்போது ஆரம்பம் ?


No comments: