சிசேரியன் செய்தே முதல் குழந்தையை பிரசவித்திருக்கிறோம் .அதுவும் பத்து மாதங்களுக்கு முன்னர் தான் .கர்ப்பப்பையில் கட்டி வேறு .எதை கேட்டாலும் ஒரே அழுகை .கோபம் தான் வந்தது எங்களுக்கு .சரி ஸ்கேனும் மற்ற பரிசோதனைகளும் செய்து பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ,கணவனும் மனைவியும் சொன்னார்கள் ,"ஆம்பிள பிள்ளையா இருந்தா வச்சிக்கிறோம் ,பொண்ணுன்னா வேண்டாம் ."
"வைத்தியம் பாக்கிற டாக்டர் ,பிரசவம் பாக்கிற டாக்டர் ,இங்க வந்தா உங்கள நோகாம கவனிக்கிற சிஸ்டர் எல்லாரும் பொம்பளைங்க ,ஆனா உங்களுக்கு ஆம்பள கொழந்த வேணும் ?" என்று நன்றாக திட்டி அனுப்பி வைத்தோம் .
No comments:
Post a Comment