Tuesday 30 March 2010

மடமை

கர்ப்பமாகயிருந்த போது சிகிச்சைக்கு வந்தார் இந்த பெண் .பரிசோதனையின் போது கர்ப்பபையில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது .பல சிக்கல்களுக்கு இடையே தீவிர கவனிப்பின் பின் பிரசவம் ஆனது .சிக்கலான பிரசவம் தான் .இது நடந்து பத்து மாதங்கள் இப்போது .இந்த பத்து மாதங்களாக சரியாக சிகிச்சைக்கு வரவில்லை .திடீரென்று போன வாரத்தில் வந்தார் .மூன்று மாத கர்ப்பத்தோடு .

சிசேரியன் செய்தே முதல் குழந்தையை பிரசவித்திருக்கிறோம் .அதுவும் பத்து மாதங்களுக்கு முன்னர் தான் .கர்ப்பப்பையில் கட்டி வேறு .எதை கேட்டாலும் ஒரே அழுகை .கோபம் தான் வந்தது எங்களுக்கு .சரி ஸ்கேனும் மற்ற பரிசோதனைகளும் செய்து பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ,கணவனும் மனைவியும் சொன்னார்கள் ,"ஆம்பிள பிள்ளையா இருந்தா வச்சிக்கிறோம் ,பொண்ணுன்னா வேண்டாம் ."

"வைத்தியம் பாக்கிற டாக்டர் ,பிரசவம் பாக்கிற டாக்டர் ,இங்க வந்தா உங்கள நோகாம கவனிக்கிற சிஸ்டர் எல்லாரும் பொம்பளைங்க ,ஆனா உங்களுக்கு ஆம்பள கொழந்த வேணும் ?" என்று நன்றாக திட்டி அனுப்பி வைத்தோம் .


No comments: