Thursday 8 January 2009

வசப்படும்


வெளி வானமெங்கும்
கொட்டிக் கிடக்கும் விண்மீன்கள்
சட்டென்று வசமாகாத என்ஆசைகள்போலவே
எனை பார்த்து கண்சிமிட்டிக் கொண்டு ..


ஜன்னலின் வழியே கைபறிக்கும் தூரத்தில்
தெரியும் போதெல்லாம்
கை நீட்ட கை நீட்டஅகப்படாமல்
ஓடி வானம் சேர்ந்து...


சரி வேண்டாம் ,என நான்
விட்டுவிடும் போதெல்லாம்
சிணுங்கலாய் என் ஜன்னலில் என் மாடியில்
எனக் கூட்டமாய் எனை அழைக்கவந்து .....


தினம் தினம் கண்ணாமூச்சியாய்
விளையாடிய களைப்பில்
சோர்ந்ததென்னவோ நான் தான் ..
அங்கே மினுமினுப்பில் ஏதும்குறைவில்லை


இளைப்பாறி, மீண்டும் கைநீட்டும் போது
மனமிளகி ஒளிக்கீற்றாய்
என் கையருகே வந்து சேரும்
அட விண்மீனில்லை! நிலவே தான்..............


2 comments:

ஆர். இளங்கோவன் said...

அன்பின் எதிரொலி
அருமை சகோதரி பூங்குழலி
பாலகனின் வணக்கங்கள் பல.....

சித்திரை மாதம் வரை
பொறுத்திருந்தேன் தமிழை
பார்க்க...ஆனால்
ஜனவரியிலே என்னை
பாரடா என்று தமிழ் வந்தது..

தமிழ் தந்த தகவலில் ஆர்வமாய் வந்தேன்
சகோதரியின் வலையில்...தமிழ் பார்க்க சேர்க்க..
அனுமதித்தால்.... என் தமிழ் வளரும்

அனுமதிக்காக நோக்கிடும்
பாலகன் இளங்கோவன், அமீரகம்.

ஆர். இளங்கோவன் said...

உயர்ந்த தமிழ்தேடி
அலைந்த வேலையில்
அகத்தில் வந்த இந்த
வலையில்...

என் வார்த்தைகள்
அவதரிக்க சகோதரியின்
அனுமதி வருமென்ற என்றா
ஆசையில்..விடைபெறுகின்றேன்
என் இனிய சகோதரியே

அன்புடன் இளங்கோவன், அமீரகம்.