Tuesday 21 April 2009

பிளாட்டினம் வாங்கலையோ !

ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அக்ஷய திருதி, நாள் நெருங்கி கொண்டிருக்கிறது .
முந்தைய வருடங்களில் நம் நாட்டு ,குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் வாங்கி குவித்த தங்கத்தின் எடை மட்டும் சில டன்கள் .இந்த வருடமும் விளம்பரங்கள் ஆரம்பித்து விட்டன .இந்த நாளில் தங்கம் வாங்கினால் வளம் கொழிக்கும் என்று எண்ணி வீட்டில் இருந்த கொஞ்சம் தங்கத்தையும் அடகு வைத்து புது தங்கம் வாங்கினார்கள் .இவர்கள் வாழ்வில் எல்லாம் எப்படி வளம் பெருகியது என்று நமக்கு இன்னமும் தெரியவில்லை .

முக்கியமான செய்தி என்னவென்றால் ,விஜய் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன் .விளம்பரத்தில் தோன்றிய ஜோசியர் சொன்னார் ,அக்ஷய திருதியைக்கு வெள்ளை நிறம் கொண்ட பால், மல்லிகை(இந்த திருதியையின் மவுசு குறைந்து விட்டதா இத்தனை மலிவு விலை விஷயங்களைப் பற்றி பேசுகிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே ) மற்றும் வெள்ளை நிற ஒப்பில்லாத பிளாட்டினம் .அப்படி போடுங்க !

வெள்ளை நிற உலோகமாகிய வெள்ளி இருக்கிறது ,அலுமினியம் இருக்கிறது ,வொய்ட் மெட்டல் இருக்கிறது ,ஏன் வெள்ளை தங்கம் கூட இருக்கிறது ,ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு பிளாட்டினம் தான் வாங்க வேண்டுமாம் .

யார் வீட்டில் வளம் சேர்ப்பதற்கோ ??????????


3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பேராசை பிடித்தோர் இருக்கும் வரை இப்படியான "பிளாட்டின" வியாபாரிகள் இருக்கத்தான் போகிறார்கள்.

பூங்குழலி said...

உண்மை தான் .ஜோசியர் வந்து சொல்லும் போது நம்பிக்கை கொண்டிருப்போரிடம் எத்தனை பெரிய தாக்கத்தை அது உண்டு பண்ணக் கூடும் ?

ஆயில்யன் said...

வெள்ளை நிற உலோகமாகிய வெள்ளி இருக்கிறது ,அலுமினியம் இருக்கிறது ,வொய்ட் மெட்டல் இருக்கிறது ,ஏன் வெள்ளை தங்கம் கூட இருக்கிறது ,ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு பிளாட்டினம் தான் வாங்க வேண்டுமாம் .

யார் வீட்டில் வளம் சேர்ப்பதற்கோ ??????????//


குட் கொஸ்டீன்
பாவம் எத்தனை பேர் வீட்ல இந்த வாசகத்தை வேதமா எடுத்துக்கிட்டு திரியப்போறாங்களோ :(