Saturday 7 March 2009

என் பட்டாம்பூச்சி


ஒரு பட்டாம் பூச்சியாய்
என்னை கடந்து போகின்றன
என் சந்தோஷங்கள்


விரட்டிக் கொண்டே போகிறேன் நான்
என்னை தாண்டிப்
பறந்துக்கொண்டேயிருக்கிறது அது


எட்டிய போதெல்லாம்
கையில் பட்டது
மகரந்தமும் வர்ணங்களும் தான்


மகரந்த வாசனையும்
வர்ணத்தின் ஸ்பரிசங்களும்
இத்தனை சுகமென்றால்
பிடித்தே ஆக வேண்டும்
என்று விரட்டுகிறது மனம்


முழுதாய் பிடித்து விட்டால்
எதை தான் விரட்டவென்று
பறக்க விட்டுக் கொண்டே இருக்கிறேன் நான்


2 comments:

ஆர்.வேணுகோபாலன் said...

விட்டு விடலாமே!
பறப்பதைத் துரத்துவதில் இருக்கிற குதூகலம் பிடிப்பதில் சில சமயங்களில் இருப்பதில்லையே!

த.வே

பூங்குழலி said...

ரொம்ப சரி த வே ..நீங்கள் சொன்னது