பாவி மனம் தாங்கலையே
என்ன ஆறுதல் சொன்னாலும்
பாழும் மனம் ஆறலையே
தேன் குழலின்னு பேரு வச்சா
வாயெல்லாம் இனிக்குமின்னு
கார்குழலின்னு பேரு வச்சா
சொன்ன வாய் வலிக்குமின்னு
வாய் நோகாம கூப்பிட தான்
பூவான பேரு வச்சாங்க
குழலின்னு சொல்லிப் பார்த்தா
தமிழ் வருமேன்னு ஆசைப்பட்டு
குழலின்னு தமிழ் பேரா
தேடிப் பிடிச்சு வச்சாங்க
பேரு சொல்ல ஆளில்லாம
மனம் நொந்து வாடையிலே
ஊரு பத்தி என்ன பாட
யார் கிட்ட போய் சொல்ல
ஒத்த சனம் மட்டுமாவது
என் முன்னாலே வந்து நின்னு
பூங்குழலின்னு வாய் நிறைய
பேரு சொன்ன மறு நிமிஷம்
ஊரு பத்தி பாட்டெடுத்து
வித விதமா பாட வாரேன்
2 comments:
பூங்குழலி !!!
arumaiyaana peyar ...
நன்றி ஷமி
Post a Comment