Thursday 5 March 2009

பேர் சொல்ல

என்ன சொல்லி அழுதாலும்
பாவி மனம் தாங்கலையே
என்ன ஆறுதல் சொன்னாலும்
பாழும் மனம் ஆறலையே


தேன் குழலின்னு பேரு வச்சா
வாயெல்லாம் இனிக்குமின்னு
கார்குழலின்னு பேரு வச்சா
சொன்ன வாய் வலிக்குமின்னு
வாய் நோகாம கூப்பிட தான்
பூவான பேரு வச்சாங்க


குழலின்னு சொல்லிப் பார்த்தா
தமிழ் வருமேன்னு ஆசைப்பட்டு
குழலின்னு தமிழ் பேரா
தேடிப் பிடிச்சு வச்சாங்க


பேரு சொல்ல ஆளில்லாம
மனம் நொந்து வாடையிலே
ஊரு பத்தி என்ன பாட
யார் கிட்ட போய் சொல்ல


ஒத்த சனம் மட்டுமாவது
என் முன்னாலே வந்து நின்னு
பூங்குழலின்னு வாய் நிறைய
பேரு சொன்ன மறு நிமிஷம்
ஊரு பத்தி பாட்டெடுத்து
வித விதமா பாட வாரேன்


2 comments:

Sudharsan said...

பூங்குழலி !!!

arumaiyaana peyar ...

பூங்குழலி said...

நன்றி ஷமி