நாங்கள் ,"ஒரு மாத்திரையை வைத்துக் கொண்டு எப்படி சொல்ல முடியும் .ஒரே நிறத்தில் பல வகையான மாத்திரைகள் இருக்கக் கூடும் .அதனால் மொத்தமாக பாட்டிலுடன் எடுத்துவாருங்கள் பார்த்து சொல்கிறோம் ",என்று கூறினோம் .
"பாட்டில் கொண்டு வர முடியாது "என்று கூறினார் .
இதை விசாரிக்க வேண்டும் என்று ,"சரி ,இது எங்கிருந்து கிடைத்தது " என்றதும்
"என் மகளுக்கு ஒரு வரன் வந்திருக்கு .மாப்பிள்ளை வீட்டுக்கு போயிருந்தோம் .
வீட்டில இந்த மாத்திரை இருந்தது .மாப்பிள்ளை இந்த மாத்திரை தான் ரொம்ப நாளா சாப்பிடுறார் ன்னு சொன்னாங்க .என்ன மாத்திரையோ,என்ன நோயோ ன்னு தெரியலையே ன்னு உங்க கிட்ட கேட்கலாம்ன்னு தெரியாம எடுத்திட்டு வந்தேன் .என் வீட்டுக்காரர் இப்படித்தான் நோய் இருக்கறத மறைச்சி என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டார் ,நா பட்ட கஷ்டம் என் பொண்ணும் படக் கூடாதில்ல ?"என்றார் .
அது ஒத்த வேறு மருந்துகளையும் கொண்டு வரச் செய்து ,அது சத்து மாத்திரை தான் என்று உறுதி செய்த பின் அனுப்பி வைத்தோம் .
1 comment:
பாவம், தாய் மனசு... தான் பட்ட கஷ்டங்கள் தன்னோடு போகவேண்டுமென்ற தவிப்புத்தான்.
நன்றி பூங்குழலி!
Post a Comment