Tuesday 24 February 2009

என் மனம்

என் மனதினை பாரமாய்
தினமும் சுமக்கிறேன்
ஏதோ ஒரு புன்னகையில் அது லேசாவதும்
ஒரு துளி கண்ணீரில் பாரம் கூடுவதுமாய்
என் மனதின் எடை மாறிக்கொண்டேஇருக்கிறது


ஒரு தராசில் அதை நெறுத்து வைத்து
சரியான அளவைகள் இட்டு
ஒரே சமனில் வைத்திருக்கும் சாமர்த்தியம்
இன்னமும் எனக்கு சாத்தியப்படாமல் போகிறது
அது சாத்தியப்படும் மட்டும்
விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில்
ஏறுவதும் இறங்குவதுமாக
மாறிக் கொண்டே இருக்கும் மனம்..


No comments: