என் மனதினை பாரமாய்
தினமும் சுமக்கிறேன்
ஏதோ ஒரு புன்னகையில் அது லேசாவதும்
ஒரு துளி கண்ணீரில் பாரம் கூடுவதுமாய்
என் மனதின் எடை மாறிக்கொண்டேஇருக்கிறது
ஒரு தராசில் அதை நெறுத்து வைத்து
சரியான அளவைகள் இட்டு
ஒரே சமனில் வைத்திருக்கும் சாமர்த்தியம்
இன்னமும் எனக்கு சாத்தியப்படாமல் போகிறது
அது சாத்தியப்படும் மட்டும்
விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில்
ஏறுவதும் இறங்குவதுமாக
மாறிக் கொண்டே இருக்கும் மனம்..
Tuesday 24 February 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment