Saturday 14 February 2009

திருமணமாம் திருமணமாம்

பாட்டியின் பல பதில்களில் ஒரு அலட்சியமான தொனி இருக்கும் .எதற்குமே அசராதவர் அவர் என்பதையும் எத்தனை உறுதி மிக்கவர் அவர் என்பதையும் அவரது பேச்சுகள் பல நேரம் உணர்த்திவிடும் .என் பாட்டியின் மக்கள் என் அப்பாவையும் சேர்த்து ஐவர் .இதில் வரிசைப் படி ,அத்தை ,பெரிய பெரியப்பா ,சின்ன பெரியப்பா ,அப்பா,சின்ன அத்தை .

என் அம்மா அப்பாவின் திருமண புகைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம் இதில் பாட்டி தாத்தா இருவருமே இல்லையே என்று யோசித்திருக்கிறேன் .அம்மாவிடம் கேட்ட போது சொன்னார் ,"பாட்டி என்
கல்யாணத்திற்கு வரவே இல்லை ",என்று .

பிறகு ஒரு சமயம் பாட்டியுடன் இருந்த போது இது நினைவு வர ,

நான் -"ஏன் பாட்டி ,நீங்க அப்பாவோட கல்யாணத்துக்கு போகல ?
பாட்டி -"வேற எவன் கல்யாணத்துக்கு நான் போனேன் ?,"
நான் -"அப்ப யார் கல்யாணத்துக்கும் நீங்க போகலையா ?"
பாட்டி -"போகல "
நான் -"ஏன் போகல? "
பாட்டி -"ஒருத்தன் மெட்ராசில கல்யாணம் வச்சான் ,ஒருத்தன் பொண்டாட்டி ஊர்ல வச்சான் ,உங்கப்பா கல்யாணத்த குத்தாலத்தில வச்சான் ,இதுக்கு எதுக்கு போகணும் ?"
நான் -"அதுக்காக போகாம இருப்பாங்களா ?"
பாட்டி -"அதான் எல்லா பொண்ணும் வீட்டுக்கு தானேளா வரும் பாத்துக்கலாம் ன்னு போகல "

வாயடைத்து போனேன் நான் .


2 comments:

Ponchandar said...

உங்கள் பாட்டியை பற்றிய பதிவுகள் எனது பாட்டியைப் பற்றி எழுத தூண்டுகிறது....

பூங்குழலி said...

கண்டிப்பா எழுதுங்க